Monday, May 10, 2010

காதலிக்கக் கற்று கொள் !


இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

காதல் வடை


காதலி என்பவள்
பாட்டி சுட்ட வடை மாதிரி
ஒழுங்கா watch பண்ணலைனா
நரிபயல் pickup பண்ணிடுவான்

நிஐமான காதல்

காதலிக்கத் தெரிந்த
உனக்கு
காதலைச் சொல்ல
துணிவில்லை..................
கண்களால் பார்க்கத் தெரிந்த
உனக்கு
பேசுவதற்கு வார்த்தைகள்
தெரியவில்லை.......................
மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதின் விருப்பத்தை
அறிய முடியவில்லை...........
அதனால் தான்
கேட்கின்றேன்
நீ என்னைக் காதலித்தது
நிஐம் தானா???
நிஐமென நம்பி வாழ்ந்த
நான் இன்று
உன் நிழலைத் தேடி
அலைகிறேன்...........
ஏனெனில்
நான் உன் மேல்
கொண்டது
நிஐமான காதல்!!!!

பிரிய மாட்டேன் என்னை மறந்து நான்...!


மண் மகள் கை நீட்டி வாவென்று
வான் மழையை அழைக்கின்றாள்

வந்த பால் மழையை எனக்கே எனக்கென்று
மார்போடு அணைக்கின்றாள்.....

அது போல என் தேவதையுன்னை கை நீட்டி
அழைக்கின்றேன்

சத்தியமாக உன் அனுமதியில்லாமல்
உன்னை அணைக்கமாட்டேன்...!

என் கண்ணீர் கடலாவது உன்
புறக்கணிப்பில்....
என் கண்ணீர் வைர கல்லாவது உன்
புன்சிரிப்பில்...

என் உள்ளம் என்ற உவர் நிலத்தை
ஊற வை உன் அன்பினால். ..

பின்பு உன்னை எக்காலமும்
பிரிய மாட்டேன்
என்னை மறந்து நான்...!

காண வந்த நிலவே


காண வந்த நிலவே
இரவில் வந்த உறவே ..
என்னை காண வந்த நிலவே...
என்னைக் கண்ட பின்னும்

இன்னும் தொலைவில் இருப்பது ஏன்..

நான் வாழ்வது உன் வெளிச்சத்தில் தான்..
நானும் தேய்கின்றேன் உன்னைப் போல் ...
என்றும் உன் நினைவுகள் தொடர்வதால் ...

இளமையோடு ஒரு பழைய காதல்

இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் கிழட்டுக் காதல்;


தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...


அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?

எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைதில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.


புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!


இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!

இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன


இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?


நீ பற்றியிருந்த என் கரங்களில்
தொற்றியிருக்கும்
என் பேரனின் குரல்
இழுத்தெடுக்கிறது என்னை
மீண்டும் நிகழ்காலத்துக்கு
"தாத்தா நேரமாகிவிட்டது
பாட்டி தேடுவாங்க"


என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"

ஆசை படுகிறேன்

கற்றே உன்னை நான் சுவாசிக்க ஆசை படுகிறேன் ,

அதற்கு நீ அனுமதி தருவய ?
ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி காத்து கொண்டு ரிக்கிரேன் ,
நீ சுவாசித்த காற்றை யவுது நான் சுவாசிக்கலாம் என்று ,
எந்நாளும் உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன் ,
ஒரு முறை யாவது நீ சுவாசித்த காற்றை ,
சுவாசிக்கலாம் என்று .