Sunday, May 9, 2010

காலம் என்ற ஓட்டை பானை...


முதல் தேதிகளில்
கவலைகளை
மறக்க எண்ணி...!

ரயிலோ
பஸ்ஸோ
நெரிசல்களில் சிக்கி
வேலைக்கும் வீட்டுமாய்
தினசரி அல்லல்கள்..

மாதம் பிறந்துவிட்டது
பாலுக்கும் அரிசிக்கும்
பாக்கி போக
மிச்சப்பட்டிருப்பது
விரல்கள் மட்டுமே

தினசரி
விடிகிறது பொழுது
கழிகிறது நிமிஷம்
காலம் என்ற ஓட்டை பானையில்
உயிர் சிந்தி
உழைப்பை கொட்டி
தொலைந்து போகிறது வாழ்க்கை!

No comments:

Post a Comment