Sunday, May 9, 2010

நீ...

நீ
பிறந்த போதுதான்
பிறந்தது
எனக்கான வாழ்வும்!

நீ
ஆழக்கடல் போல்
அமைதியாய்
இருந்து கொண்டு
என்னை
ஓரக்கடல் போல்
ஓலமிடச் செய்கிறாய்!

நீ
எங்கிருக்கிறாய் என்பது
எனக்குத் தெரியாது...
என் காதலுக்குத் தெரியும்!

நீ
என்
அருகிலிருந்த போதெல்லாம்
அறிய முடியாத காதலை
ஒருநாள் விலகியிருந்தபோது
உணர்ந்து கொண்டேன்!
நான் முகமது கஜினி
பதினேழு முறையல்ல...
பதினேழாயிரம் முறை கூட
படையெடுப்பேன்!
எனக்கு வேண்டியது
உனக்குள் இருக்கும் காதல்!

No comments:

Post a Comment