Monday, May 10, 2010

பிரிய மாட்டேன் என்னை மறந்து நான்...!


மண் மகள் கை நீட்டி வாவென்று
வான் மழையை அழைக்கின்றாள்

வந்த பால் மழையை எனக்கே எனக்கென்று
மார்போடு அணைக்கின்றாள்.....

அது போல என் தேவதையுன்னை கை நீட்டி
அழைக்கின்றேன்

சத்தியமாக உன் அனுமதியில்லாமல்
உன்னை அணைக்கமாட்டேன்...!

என் கண்ணீர் கடலாவது உன்
புறக்கணிப்பில்....
என் கண்ணீர் வைர கல்லாவது உன்
புன்சிரிப்பில்...

என் உள்ளம் என்ற உவர் நிலத்தை
ஊற வை உன் அன்பினால். ..

பின்பு உன்னை எக்காலமும்
பிரிய மாட்டேன்
என்னை மறந்து நான்...!

No comments:

Post a Comment