Monday, May 10, 2010

நிஐமான காதல்

காதலிக்கத் தெரிந்த
உனக்கு
காதலைச் சொல்ல
துணிவில்லை..................
கண்களால் பார்க்கத் தெரிந்த
உனக்கு
பேசுவதற்கு வார்த்தைகள்
தெரியவில்லை.......................
மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதின் விருப்பத்தை
அறிய முடியவில்லை...........
அதனால் தான்
கேட்கின்றேன்
நீ என்னைக் காதலித்தது
நிஐம் தானா???
நிஐமென நம்பி வாழ்ந்த
நான் இன்று
உன் நிழலைத் தேடி
அலைகிறேன்...........
ஏனெனில்
நான் உன் மேல்
கொண்டது
நிஐமான காதல்!!!!

No comments:

Post a Comment