Sunday, May 9, 2010

மதம்


மனிதன் -
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ - மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி - மதம்!

கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி - மதம்!

மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் -
வளர்க்கும் சக்தி - மதம்!

இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை - மதம்!

காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் -
முடைந்துப் போன விதி - மதம்!

வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் -
"தான்" னின் முழு அடையாளம் - மதம்!

மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் - மதம்!

நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் -
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோர் மூட எல்லை - மதம்!

மனிதன் -
தன்னை உணரும் முன்னே
"இவன்" என்று முழங்கிக் கொண்ட
மதம் - மதம்!!

No comments:

Post a Comment