காற்றடைத்த பையில் ஏறி அமர்ந்தேன்.
தயாராவதற்குள் வழுக்கி இறங்கியது.
சுற்றிலும் மூடிய சறுக்கல்.
ஒரே கும்மிருட்டு.
கடந்த பின்பே உணர்ந்துகொண்ட திருப்பங்கள்.
நிர்ணயிக்கப்பட்ட பாதையில்
படுவேகமாய்ப் பயணமானேன்.
ஏதோ வெளிச்சம் போல் தெரிந்தது.
கண்கொண்டு காணுமுன்
தொப்பென்று விழுந்தேன்.
என்னைச் சுமந்த பை நீரில் மிதந்தது.
மென்தென்றல் வீசியது.
பரந்த ஆகாயம் வெறித்துப் பார்த்தது.
தணியாத வேட்கை உந்தித்தள்ள
வேறொரு பையுடன் கிளம்பினேன்.
மீண்டும் ஒரு முறை!
Sunday, May 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment